அறுகம்பைக்கான பயணக்கட்டுப்பாட்டை தளர்த்தியது இஸ்ரேல்

Date:

அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியிருந்தன

இதனால் மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் தனது குடிமக்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை, அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்பிங் விளையாட்டால் இஸ்ரேலியர்கள் அதிகம் உலாவுவதால் ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்ததாக கடந்த 23 ஆம் திகதி  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அண்மையில் அரசாங்கம் அறிவித்தது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...