இன்று முதல் தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம்!

Date:

தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 9ம் திகதி வரை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு துரித பதிலளிப்பு வழங்கல் பிரிவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 0704 565 656 என்ற இலக்கத்தின் ஊடாக தட்டம்மை, ருபெல்லா உள்ளிட்ட தொற்றுநோய்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...