மலேசியாவில் கலாநிதி பட்டம் பெற்ற இலங்கையர்கள்: சிறந்த மாணவராக ஆஸாத் ஸிராஸ்!

Date:

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதி நேற்று (16) நிறைவுபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவின் போது இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

கலாநிதி. அரபாத் கரீம் – பேருவளை
கலாநிதி. அஸ்லம் – தெல்தோட்டை
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் – புத்தளம்
கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் – புல்மோட்டை
கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் – கொழும்பு
கலாநிதி. ஸப்ரீனா – ஏறாவூர்

கலாநிதி. அரபாத் கரீம் பிக்ஹ் மற்றும் உஸுலுல் பிக்ஹ் துறையிலும்
கலாநிதி. அஸ்லம் ரிஸா சமூகவியல் மற்றும் மானிடவியல் துறையிலும்
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் உஸுலுத்தீன் மற்றும் மத ஒப்பீட்டாய்வு துறையிலும், கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையிலும், கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் வியாபார நிருவாகவியல் துறையிலும், கலாநிதி. ஸப்ரீனா கல்வித் துறையிலும் தமது கலாநிதி பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் கலாநிதி ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் Faculty of Islamic Revealed Knowledge and Human Sciences இனால் சிறந்த மாணவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் விஷேட அம்சமாகும்.

தகவல்: மெஹமட் தெளபீக், அரசியல் விஞ்ஞானத் துறை, மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...