வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

Date:

வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது அவர்  இதனை தெரிவித்தார்.

அதற்கமைய, கெஸ்பேவ வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 48 வயதான அவர் பயாகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

மேலும், நிகவெரட்டிய கொபேகனே வாக்குச் சாவடியில் இன்று (14) காலை பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் (57) திடீரென உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

அவர் சடலம் தற்போதும் அங்கேயே உள்ளதாகவும் நிக்கவேரட்டிய நீதவான் வருகையை அடுத்து சடலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...