அரபு எழுத்தணியை ஊக்குவிக்கும் மற்றொரு முயற்சி: மூதூரில் இரு நாள் பயிற்சி!

Date:

மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் இரண்டு நாள் அரபு எழுத்தணிப் பயிற்சி செயலமர்வு டிசம்பர் 28,29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இப் பயிற்சி செயலமர்வானது முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ரீதியில் இயங்கி வரும் அரபு எழுத்தணிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.

முக்கிய விருந்தினராக திருகோணமலை மாவட்ட “முஸ்லிம் எயிட்” ஒருங்கிணைப்பாளர் தாஸ்மின் சலீம் அவர்களும் வளவாளர்களாக அஷ்ஷெய்க் .ஜுனைத் நளீமி அவர்களும் அஷ்ஷெய்க் சில்மி நூரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வருகின்ற சுமார் 11 மத்ரஸாக்களிலிருக்கு 33 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஏ.பி.எம். அஷ்ரப் அவர்கள் இந்த அரபு எழுத்தணி சங்கத்தின் தலைவராக இருந்து இதனை வழி நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...