இலங்கை மின்சார சபைக்கு 150 மில்.டொலர் கடனுதவி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கைச்சாத்து!

Date:

150 மில்லியன் டொலர் கடனை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது வியாழக்கிழமை (19) கையெழுத்திட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன முன்னிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தகஃபுமி கடோனோ மற்றும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொனால்ட் கொமஸ்டர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையின் மின்சாரத் துறையில் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கானு கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த நவம்பர் மாதம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கடனுதவி மூலம் இலங்கை மின்சார சபையின் நீண்ட கால பரிமாற்ற திட்டத்தில் பல அத்தியாவசிய திட்டங்கள் 2025-2027 இல் செயல்படுத்தப்படும்.

இது கட்டத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...