இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

Date:

இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (26) அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே ‘அல் குத்ஸ் டுடே’ என்ற சேனலுக்கு சொந்தமான ஒளிபரப்பு வேன் மீது நடத்திய இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்களும்  கொல்லப்பட்டனர்.

போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45,028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  இன்று அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போதே, வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு பிறகு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

 

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...