டெர்மினேட்டர் எனும் இஸ்ரேலிய படை வீரர் இலங்கையில்: பெல்ஜியத்திலிருந்து தகவல்!

Date:

பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அவரது உடலை இழிவாக நடத்தியதற்கு பொறுப்பனவராகக் கருதப்படுகின்ற கல் பெரேன் புக் எனும் இஸ்ரேலிய படைவீரர் கொழும்பு வந்திருப்பதாக பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஹித் ரஜப் பவுண்டேஷன் எனும் அரச சார்பற்ற நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெர்மினேட்டர் என்று அழைக்கப்படும் இந்த படை வீரரை கைது செய்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை அதிகார பீடங்களை அது அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐசிசிக்கு முறையிட்டதாகவும், சர்வதேச ரெட் நோட்டீஸ் விடுக்குமாறு இன்டர்போலுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

ஒகஸ்ட் 9 2024 இல் பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அதனை வெற்றியின் சின்னமாக தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருந்தார்.

இது சர்வதேச மனித உரிமை சட்டத்தில் இறந்த உடல்களுக்கான கௌரவத்தை பாதிப்பதாகும். அவர் இலங்கைக்கு வந்திருப்பதை பயன்படுத்தி இலங்கை அதிகாரிகள் அவரை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...