பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழுதியதற்காக ஏறாவூர் இளைஞர் கைது..!

Date:

‘அல்லாஹ் பலஸ்தீனைப் பாதுகாப்பான்’ என தனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏறாவூர் இளைஞரொருவர் நேற்று (15)  கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனை அடிமைப்படுத்த இஸ்ரேல் முனைகிறது. தொழில் நுட்ப ரீதியாக இஸ்ரேல் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் பலஸ்தீனை அடிமைப்படுத்த அவர்களால் முடியாது. அந்தப் பூமியை அல்லாஹ் பாதுகாப்பான் என தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரது இந்தக் கூற்றுக்களின் பின்னால் ஏதேனும் அபிப்பிராயங்கள் உள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...