பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை விருப்பம்: அநுரகுமார புட்டினுக்கு கடிதம்!

Date:

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்,

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான தனது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. ஏனைய பிரிக்ஸ் நாடுகளையும் ஒரு கூட்டாளி நாடாக இணைவதற்கான கோரிக்கையுடன் நாங்கள் அணுகியுள்ளோம்.

மேலும், அவர்களின் நேர்மறையான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தூதுவர் பகீர் அம்சா ரஷ்ய ஊடகமான RIA நோவோஸ்டியிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி புட்டினுக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே மாதத்தில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நாட்டின் விண்ணப்பத்திற்கு ஆதரவைக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் தற்போது 3.6 பில்லியன் மக்கள்தொகை கொண்ட பத்து நாடுகளை உள்ளடக்கியது.

இந்த நாடுகள் உலகின் எண்ணெய் உற்பத்தியில் 40% மற்றும் உலகளாவிய பொருட்களின் ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...