மலேசிய முதலீட்டாளர்களை நாட்டுக்குப் பெற்றுத் தருவதே SLAMP இன் நோக்கம்: தலைவர் இஸ்மத் ரம்ஸி

Date:

மலேசிய முதலீட்டாளர்களை (FDI) நாட்டுக்குள் ஈர்த்துத் தருவது, கல்வியியலாளர்களையும் கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்துவது, தூதரக உறவுகளைப் பலப்படுத்துவது என்ற நோக்கங்களிலேயே இலங்கை முஸ்லிம் தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக சங்கம் ( Sri Lankan Muslim Professionals and Business Association – SLAMP) உருவாக்கப்பட்டதாக அதனுடைய ஸ்தாபகத் தலைவர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.

இந்த நோக்கங்களின் அடிப்படையில் ஒரு வருட காலம் செயற்பட்டதன் பின்னர் இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் வசிக்கும் இலங்கை கல்வியியலாளர்கள், தொழில்வாண்மையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் பலரும் இந்தச் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர்.

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து இதனுடைய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலேசியாவுக்கு வரும் இலங்கையர்களின் நலன் தொடர்பில் ஈடுபடுவதும் இந்த சங்கத்தின் பணியாகும். இந்தத் தொடரில் தற்போது மலேசியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள 19 வயதின் கீழான இலங்கை மகளிர் அணியையும் இந்தச் சங்கம் தொடர்பு கொண்டதாகவும் சங்கத்தின் தலைவர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...