மாவட்ட செயலாளர் தலைமையில் தேசிய மீலாத் விழா இன்று இரத்தினபுரியில்.!

Date:

2024 ஆம் ஆண்டின் தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் மகிந்த வீரசூரிய, பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் நடத்திய மீலாத் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

அத்துடன் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு நினைவு முத்திரையும் இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.

இம்முறை தேசிய மீலாத் விழாவில் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என இரத்தினபுரி மாவட்ட மேலதிக செயலாளர் கயனி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம்: வர்த்தகம் மற்றும் துறைமுக முதலீடுகளை மேம்படுத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை!

இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி...

இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா...