இலங்கை மின்சார சபைக்கு 150 மில்.டொலர் கடனுதவி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கைச்சாத்து!

Date:

150 மில்லியன் டொலர் கடனை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது வியாழக்கிழமை (19) கையெழுத்திட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன முன்னிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தகஃபுமி கடோனோ மற்றும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொனால்ட் கொமஸ்டர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையின் மின்சாரத் துறையில் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கானு கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த நவம்பர் மாதம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கடனுதவி மூலம் இலங்கை மின்சார சபையின் நீண்ட கால பரிமாற்ற திட்டத்தில் பல அத்தியாவசிய திட்டங்கள் 2025-2027 இல் செயல்படுத்தப்படும்.

இது கட்டத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...