இஸ்ரேலுடனான மோதல்: லெபனானிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் வெளியேற்றம்..

Date:

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 26 இலங்கையர்கள் கொண்ட அண்மைய குழு நேற்று மாலை (04) கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

லெபனானில் உள்ள IOM இன் உதவியைப் பாராட்டிய இலங்கைத் தூதரகம், லெபனானில் பதற்றமான சூழ்நிலையில் இருந்தாலும், மிகவும் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து வசதிகளை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்தது.

 

 

 

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...