இஸ்ரேல் – காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை: CIA இயக்குனர் பில் பர்ன்ஸ் கத்தார் விஜயம்

Date:

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற  பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாட அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குநர் பில் பர்ன்ஸ் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

பில் பர்ன்ஸ் கட்டார் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அமைச்சரான முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் தற்காலிக நிலைமைகள் குறித்தும், பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மத்திய கிழக்கு ஆலோசகர் பிரட் மெக்குர்க் ஏற்கனவே தோஹாவில் உள்ளதாகவும், கத்தார், எகிப்து மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

10,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள்  இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாகவும்  காஸாவில் சுமார் 100 இஸ்ரேலிய கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா மீதான போரை நிறுத்த மறுத்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்தன.

இஸ்ரேல் ஹமாஸ் போரில்  45,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர்.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...