டெர்மினேட்டர் எனும் இஸ்ரேலிய படை வீரர் இலங்கையில்: பெல்ஜியத்திலிருந்து தகவல்!

Date:

பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அவரது உடலை இழிவாக நடத்தியதற்கு பொறுப்பனவராகக் கருதப்படுகின்ற கல் பெரேன் புக் எனும் இஸ்ரேலிய படைவீரர் கொழும்பு வந்திருப்பதாக பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஹித் ரஜப் பவுண்டேஷன் எனும் அரச சார்பற்ற நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெர்மினேட்டர் என்று அழைக்கப்படும் இந்த படை வீரரை கைது செய்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை அதிகார பீடங்களை அது அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐசிசிக்கு முறையிட்டதாகவும், சர்வதேச ரெட் நோட்டீஸ் விடுக்குமாறு இன்டர்போலுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

ஒகஸ்ட் 9 2024 இல் பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அதனை வெற்றியின் சின்னமாக தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருந்தார்.

இது சர்வதேச மனித உரிமை சட்டத்தில் இறந்த உடல்களுக்கான கௌரவத்தை பாதிப்பதாகும். அவர் இலங்கைக்கு வந்திருப்பதை பயன்படுத்தி இலங்கை அதிகாரிகள் அவரை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...