ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது: பிரதமரின் நத்தார் வாழ்த்துச் செய்தி

Date:

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி

நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம்.

ஓர் தேசமாக மீள கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியமானது. ஒற்றுமையுடன் செயற்படுதல், பகிர்ந்து வாழுதல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் ஊடாக எமது உறவுகளும் வலுவானதாக முன்னேற்றமடையும். ஆரோக்கியமான மக்கள் சமூகம் மற்றும் பலம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பும் பணியானது வீட்டிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பதை இதுபோன்ற கூட்டு முயற்சிகள் எமக்கு நினைவூட்டும்.

உள்நாட்டில் உட்பட வெளிநாட்டில் சேவையாற்றுபவர்களையும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பண்டிகை காலத்தில் தமது அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிட முடியாத அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூற வேண்டும்.

உலகம் முழுவதும் காணப்படும் யுத்த சூழல் காரணமாக சிறுவர்களும் மரணிக்கும் துர்பாக்கிய நிலைக்கு மத்தியில் நாம் நமது உள்ளங்களில் அமைதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது.

அத்துடன் இந்த பண்டிகை காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி மகிழ்ச்சியுடன் அதனை கொண்டாடுவதில் அவதானத்துடன் இருக்க வேண்டும். நமக்கு மாத்திரமன்றி ஏனையவர்களின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு சரியான தெரிவுகளை மேற்கொள்ளுங்கள்.

இந்த காலத்தில் பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்பவும், பொறுமையை வளர்த்துக்கொள்ளவும், ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

 

 

 

 

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...