கடவுச்சீட்டுப் பணிகளை விரைவுபடுத்த மேலதிக நேரச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகள்!

Date:

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் நன்மையடையவுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணையவழி மூலம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான தினத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குடிவரவு திணைக்களம் 10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...