கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்தார்.
ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.