கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளராக பைசல் ஆப்தீன் நியமனம்!

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று (06) புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சகல இனங்களும் செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் சகல இனத்தவர்களையும் உள்ளடக்கியவாறு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலராக கடமையாற்றிய இசட். ஏ.எம். பைசல் மாகாண முதலமைச்சரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக ஜே.லியாகத் அலி, மாகாண விவசாய விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜி.கோபால
ரட்ணம் பேரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...