பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழுதியதற்காக ஏறாவூர் இளைஞர் கைது..!

Date:

‘அல்லாஹ் பலஸ்தீனைப் பாதுகாப்பான்’ என தனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏறாவூர் இளைஞரொருவர் நேற்று (15)  கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனை அடிமைப்படுத்த இஸ்ரேல் முனைகிறது. தொழில் நுட்ப ரீதியாக இஸ்ரேல் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் பலஸ்தீனை அடிமைப்படுத்த அவர்களால் முடியாது. அந்தப் பூமியை அல்லாஹ் பாதுகாப்பான் என தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரது இந்தக் கூற்றுக்களின் பின்னால் ஏதேனும் அபிப்பிராயங்கள் உள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...