புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு

Date:

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை இன்று உத்தரவிட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் கசிந்தமைக்காக உரிய பரீட்சையை மீள நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...