பேருவளை மாளிகாஹேனையில் அமைந்துள்ள பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரித் தக்கியாவில் 146ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பாராயண மஜ்லிஸ் நாளை (28) அதிகாலை ஸுபஹ் தொழுகையின் பின்னர் ஆரம்பமாகும்.
காதிரியத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய நாயகம் அல் ஆலிமுல் பாழில் அஹ்மத் பின் முஹம்மத் ஆலிம் காதிரிய்யதுன் நபவி தலைமையில் இப்புனித மஜ்லிஸ் ஆரம்பிக்கப்படும் .
வெள்ளிக்கிழமை தவிர தொடர்ந்து ஒரு மாதகாலம் புனித ஸஹுஹுல் புஹாரி ஹதீஸ் பாராயணம் செய்யப்படுவதோடு விளக்கவுரையும் இடம்பெறும். 2025ஜனவரி மாதம் 30ஆம் திகதி முற்பகல் தமாம் பெரிய கந்தூரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.