Clean Sri Lanka வேலைத்திட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பம்

Date:

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

341 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் குறிப்பிட்டார்.

இதனிடையே, Clean Sri Lanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்டோர் இந்த செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களை தவிர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் இந்த செயலணியில் இடம்பெற்றுள்ளார்.

 

 

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...