இறக்குமதி செய்யப்படும் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கும்!

Date:

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் கிடைக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 மெட்ரிக் டன்களுக்கு உட்பட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசியில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளதுடன், இதற்கமைய அரிசி இருப்புகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அடுத்த வாரத்தில் நாட்டை வந்தடையும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரிசி மீதான இறக்குமதி வரியை திருத்தியமைத்து, அரிசி இறக்குமதியை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் அரசாங்கம் அனுமதித்து விசேட வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை நுகர்வோருக்கு உடனடியாக வழங்குவதற்காக துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் உள்ள அரிசி 04 மணித்தியாலங்களுக்குள் விடுவிக்கப்படும் என சுங்கத் திணைக்களத்திலிருந்தும் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...