இலங்கை மின்சார சபைக்கு 150 மில்.டொலர் கடனுதவி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கைச்சாத்து!

Date:

150 மில்லியன் டொலர் கடனை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது வியாழக்கிழமை (19) கையெழுத்திட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன முன்னிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தகஃபுமி கடோனோ மற்றும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொனால்ட் கொமஸ்டர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையின் மின்சாரத் துறையில் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கானு கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த நவம்பர் மாதம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கடனுதவி மூலம் இலங்கை மின்சார சபையின் நீண்ட கால பரிமாற்ற திட்டத்தில் பல அத்தியாவசிய திட்டங்கள் 2025-2027 இல் செயல்படுத்தப்படும்.

இது கட்டத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...