உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்

Date:

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு மாதங்கள் காலவகாசம் தேவைப்படுகிறது.

எனவே, க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...