உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்

Date:

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு மாதங்கள் காலவகாசம் தேவைப்படுகிறது.

எனவே, க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...