கஜகஸ்தானில் தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம்; 42 பேர் பலி!

Date:

கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தின் அருகே அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்தனர்.

இதில் 42 பயணிகள் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக நெஞ்சை பதற வைக்கும் வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது.

அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து இன்று அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ரஷ்யா கூட்டமைப்பின் உட்குடியரசு நாடாக உள்ள செச்சனியாவின் தலைநகர் குரோசனி நகருக்கு புறப்பட்டு சென்றது.

விமான பணியாளர்கள் பற்றிய விபரம் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே தான் விமானம் தரையிறங்க முயன்றபோது தரையில் மோதி விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் விமானம் வானில் இருந்து ஒரே சீராக தரையிறங்காமல் அசைந்து அசைந்து வந்து தரையில் மோதி தீப்பிடித்ததும் பதிவாகி உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அந்த விமானம் வானில் பறந்தபோது மோசமான வானிலை நிலவி உள்ளது.

அதிகப்படியான பனிமூட்டத்தால் விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தை அவசரமாக இயக்க விமானிகள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு பிறகு தான் விமானம் அவசர தரையிறக்கத்துக்கு தயாராகி உள்ளது.

ஆனால் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் விமானத்தில் வேறு ஏதாவது இன்ஜின் உள்ளிட்ட பிற இயந்திர கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...