காசாவில் உயிரிழந்த 35,000 மக்களின் பெயர்கள் அடங்கிய 150 மீட்டர் பேனர் சிட்னியில் காட்சிப்படுத்தப்பட்டது

Date:

காசா பகுதியில் 35,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், அவர்களின் பெயர்களைக் கொண்ட  150 மீட்டர் நீளமான பேனர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலின் நோக்கம், காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலையை உலகளவில் வெளிச்சம் போட்டுக் காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.

இதற்காக சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி, பலஸ்தீனியர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.,

சில இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டதால் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வு, பலஸ்தீனிய மக்களின் துயரமான நிலைமைக்கு உலக மக்கள்  மத்தியில் பரவலான ஆதரவை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...