காசாவில் ஒரு மில்லியன் குழந்தைகள் அவல நிலையில்: உடனடி போர் நிறுத்தத்திற்கு யுனிசெஃப் அழைப்பு

Date:

காசாவில்  கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக  யுனிசெப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய தங்குமிடம், தண்ணீர் மற்றும் பாதுகாப்பு இல்லாத அவர்களின் நிலைமைகளை எடுத்துரைத்த அவர் உடனடி போர் நிறுத்தத்தின் அவசியத்தையும்  வலியுறுத்தினார்.

உலகளாவிய குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தனது புதிய மனிதாபிமான பதில் மொழி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘குழந்தைகளுக்கு போர் நிறுத்தம் தேவை என்றும் அவர்களின் துன்பம் முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

2025ஆம் ஆண்டில் உலகின் 146 நாடுகளில் உள்ள 10 கோடி 9 லட்சம் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்க 990 கோடி ரூபாய் நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது.

வரும் ஆண்டில் பல நாடுகள் மோதல்கள், காலநிலை மாற்றம், இடப்பெயர்வு மற்றும் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், இந்த நிதி மிகவும் அவசியமாகும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

உலகளவில் 21 கோடி 30 லட்சம் குழந்தைகள் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், இந்த நிதி மூலம் 10 கோடி 9 லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மனிதாபிமான தேவைகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் 5 கோடி 75 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் பிறந்துள்ளனர்.

2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உடனடி நடவடிக்கை அவசியமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...