ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்ற மோசடி: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Date:

ஜனாதிபதி நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சட்டத்தரணிகள் குழுவொன்று பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் எழுத்துமூலம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பொதுமக்களின் நிதியைப் பாதுகாப்பதற்கான வழக்கறிஞர்கள் அமைப்பு என முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி நிதியத்தில் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி நிதிச் சட்டத்தில் தெளிவான அளவுகோல்கள் உள்ளதாகவும், அந்த அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டு பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதால், விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த முறைப்பாட்டை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...