சபாநாயகரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு

Date:

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸ் இக்னாசியோ சன்சேஸ் அமோர் (Jose Ignacio Sanchez Amor) உள்ளிட்ட தூதுக் குழுவினர் கடந்த 17ஆம் திகதி  சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் சபாநாயகருக்கும், புதிய அரசாங்கத்திற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் குறித்த இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

இதில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வகிபாகத்தைப் பாராட்டிய அவர், இந்த ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருப்பதற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

உண்மையான ஜனநாயகப் பண்புகளுடன் கூடிய, மிகவும் வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை நோக்கி அரசாங்கம்  தற்போது செயற்பட்டு வருவதாகவும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்த நாட்டில் முதல் முறையாக இயலாமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும்  சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Popular

More like this
Related

7 மாதங்களுக்குள் 1126 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள்!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக...

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள்...

கஹட்டோவிட்டவில் முப்பெரும் நிகழ்வுகள்!

கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம்,...

ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று...