(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்புச் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் (31) நீதி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது தேசிய ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள், பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
குறித்த பிரச்சினைகளை இனங்கண்டு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கும் இச்சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர், உதவிச் செயலாளர்கள், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எல்.ஐ.ஏ.எம். சாஜஹான் மற்றும் உதவி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.