போராடவும் கருத்து வெளியிடவும் சுதந்திரம் கோரி யாழ் பல்கலை மாணவர் உண்ணாவிரதம்!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக முன்றலில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தியுள்ளனர்.

1. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து.

2. ⁠போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்.

3. ⁠விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்.

4. ⁠மாணவர்களின் கற்றலுக்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கு.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...