மருதானை சாஹிரா மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை..!

Date:

இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி அண்மைக்காலமாக பல துறைகளில் பிரகாசித்து வருகிறது.

பல விளையாட்டுத்துறைகளிலும் பரீட்சைகளிலும் இன்னும் பல நிகழ்ச்சிகளிலும் இப்பாடசாலை பல மட்டங்களிலும் சிறப்பான தேர்ச்சிகளை பெற்று வருகின்றது.

அந்தவகையில் இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பாக கருதப்படுகின்ற இப்பாடசாலையின் 5ஆம் தர மாணவர்கள் இம்முறையும் மிகச்சிறப்பான முறையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

மொத்தமாக 243 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவர்களில் 228 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

அவர்களில் எழுபது (70) மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு  மேல் மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 100சதவீதமாகும்.

இப்பரீட்சையில் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்களுக்கு ‘நியூஸ்நவ்’ குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...