மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை – நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி!

Date:

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹாமில்டனின் செடான் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (08) காலை 06.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்தது.

எனினும், ஹாமில்டனில் தொடரும் தொடர்ச்சியான மழையால் நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்க‍ை அணி வெள்ளை-பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரை நியூஸிலாந்து 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

அதன் பின்னர் ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் நியூஸிலாந்து ஒன்பது விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

source : ஆதவன்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...