‘Clean Sri Lanka’ தொடர்பில் பாராளுமன்றில் இரு நாள் விவாதம்

Date:

தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இந்த  விவாதம் நடைபெறும்.

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு புரியவைக்கும் வகையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்றத்தில்   தெரிவித்தார்.

இந்த விவாதத்தின் ஊடாக கிளீன் ஸ்ரீலங்காத் திட்டத்தின் உண்மையான நோக்கம் அதன் ஊடாக ஏற்பட போகும் சமூக மாற்றம் தொடர்பில் அரச ஊழியர்களும், மக்களும் மேலும் பல அறிவை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...