முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்துள்ளது: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் அவர்களின் மறைவுக்கு ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை அனுதாபம்

Date:

மறைந்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களிடம் இருந்த சிறந்த குணம், ஒழுக்கம், உபசரிப்பு மற்றும் மாற்று மத சகோதரர்களை அனுகும் விடயங்களை கவனிக்கும் போது ஒரு முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்து நிற்கிறது.

அவருக்கு நிகர் அவரே அவரின் இழப்பு நாட்டிற்கும் சமூகத்திற்கும் குறிப்பாக புத்தளத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தனது அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 30 வருடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை மற்றும் புத்தளம் மாவட்டத்தை வழி நடாத்திய முன்னாள் தலைவராகவும் தற்போதய நிறைவேற்றுக் குழவின் உயர்பீட உறுப்பினராகவும் 15 வருடம் சர்வ மதக் குழுவின் சமயத் தலைவராகவும் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் இருந்து பல சேவைகளை நாட்டிற்கும் புத்தளத்திற்கும் ஆற்றிய அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் (13) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

உலமாக்களை பாராட்டி ஊக்குவிப்பதிலும் நிர்வாக மற்றும் அரசியல் முறைமைகளை கையாளுவதிலும் அவர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்.

அன்னாரின் குடும்பத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...