இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் அயர்லாந்து!

Date:

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அயர்லாந்து அதிகாரப்பூர்வமாக இணைந்துகொண்டுள்ளது.

கடந்த வருடம் அயர்லாந்து பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. தென்னாப்பிரிக்கா முதன்முதலில் டிசம்பர் 2023இல் இஸ்ரேலுக்கு எதிராக தனது வழக்கைத் தாக்கல் செய்தது.

காசா பகுதியில் தொடர்ச்சியான தாக்குதலின் போது இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டியது. இஸ்ரேல் ‘இனப்படுகொலையில் ஈடுபடவில்லை’ என்பதை கடுமையாக மறுத்து, நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்துப் போராடி வருகிறது.

நிகராகுவா, கொலம்பியா, லிபியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் இந்த வழக்கில் இணைந்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உடனடி போர் நிறுத்தத்தைக் கோரும் தீர்மானத்தை மீறி, 2023 அக்டோபரில் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் காசா மீது தனது மிருகத்தனமான தாக்குதலைத் தொடர்கிறது.

உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 46,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இஸ்ரேலிய தாக்குதல் உணவு சுத்தமான நீர் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...