எம்.பிக்களின் நாளாந்த உணவுக்கான தொகை ரூ.2,000 ஆக அதிகரிப்பு

Date:

பாராளுமன்றத்தில் வழக்கப்படும் உணவுகளின் விலையை அதிகரிக்கும் திட்டம்   அமைச்சரவையின் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான அமைச்சரவை ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் சுத்தமான இலங்கை திட்டத்தில் அனைத்து விதமான குறைடுகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரைகாலமும் காலை உணவு, பகல் உணவு மற்றும் மாலைநேர தேநீருக்காக 450 ரூபாவே அறவிடப்பட்டு வந்தது.

காலை உணவு – 100
பகல் உணவு – 300
மாலைநேர தேநீர் – 50

அதற்கமைய அந்த கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு – 600
பகல் உணவு – 1200
மாலைநேர தேநீர் – 200. பெப்ரவரி மாதம் முதல் புதிய விலை அமுலுக்கு வரும்.

 

 

Popular

More like this
Related

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...