கடந்த அரசுகளின் செயற்பாட்டால் கடமையை சரியாக செய்ய முடியவில்லை: பிரதி அமைச்சர் முனீரிடம் அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Date:

தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முழப்பருக்கும் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உதவி அதிகாரிகளுக்கும் இடையேயான சந்திப்பொன்று நேற்று (27) நீதி அமைச்சில் நடைபெற்றது.

இந்த சந்தப்பில், உத்தியோகத்தர்களின் கடமைகளை வெளிப்படைத்தன்மையுடனும் திறமையுடனும், ஒருங்கிணைப்புடன் எவ்வாறு பேணுதல்,மற்றும் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் இருந்த அரசாங்கங்களினால் அமைச்சுக்களை அரச நிறுவனங்களை அவ்வப்போது அமைச்சகங்களுக்கு கையளித்தல், மீண்டும் கையகப்படுத்துதல், அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் போன்ற மோசமான நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இதனால் தரமான சேவைகளை வழங்க முடியாமல் போனதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும் தங்கள் கடமைப் பட்டியலில் கவனம் செலுத்துமாறும், அமைச்சரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இங்கு விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க, அரசக் கொள்கையில் நீண்டகால மாற்றம் தேவை என்றும், அதற்காக பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் செயலாளர் (தேசிய ஒருங்கிணைப்பு) கே. மகேசன், இயக்குநர் (தேசிய ஒருங்கிணைப்பு) ஏ.எஸ்.பி. வீரசூரிய மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஊக்குவிப்பு உதவி அதிகாரி உட்பட மூத்த அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...