காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கை வரவேற்பு!

Date:

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“பணயக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காசாவில் அவர்கள் வசிக்கும் இடங்களுக்குத் திரும்புவதற்கும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் வழி வகுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் நிலைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“இந்த முன்னேற்றங்கள் பலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஸ்தாபிப்பதற்கு பங்களிக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...