துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது: பாதுகாப்பு அமைச்சு

Date:

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி அனுப்புவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எந்த நேரத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, காவல்துறை மற்றும் இராணுவத்தின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தற்போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காலக்கெடு முடிவடைந்தும் துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இருப்பினும், போர் இடம்பெற்ற காலத்தின் போது காவல்துறை மற்றும் இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பித் தருவதற்கான காலக்கெடு ஜனவரி 20 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...