தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் முனீர் கலந்துரையாடல்..!

Date:

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்புச் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் (31) நீதி அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது தேசிய ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள், பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறித்த பிரச்சினைகளை இனங்கண்டு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கும் இச்சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர், உதவிச் செயலாளர்கள்,  தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எல்.ஐ.ஏ.எம். சாஜஹான் மற்றும் உதவி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...