பதுளை மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Date:

பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, லுனுகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் அடைமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் ஓடைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பனிமூட்டத்துடன் கூடிய குளிரான காலநிலை நிலவி வருகிறது.

பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்த அபாய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்போர் மண்சரிவு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்றி மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் எமது அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...