நாடளாவிய ரீதியில் டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து, களப் பரிசோதனை குழுக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முதன்முறையாக ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 03 நாட்களைக் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதுடன், வரும் ஜூன் 26ஆம் திகதி வரை தொடரவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கைவிடப்பட்ட வெற்று நிலங்களை இலக்கு வைத்து தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
