போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல்; தெற்கு காசா பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனிய குழந்தை பலி!

Date:

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் போடப்பட்டிருந்த போதிலும், தெற்கு காசா பகுதியில் உள்ள மத்திய ரஃபாவில் திங்கட்கிழமை ஒரு இஸ்ரேலிய வீரர் பலஸ்தீனிய குழந்தையை சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்-அவ்தா சதுக்கத்திற்கு அருகில் இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜகாரியா ஹமீத் யஹ்யா பர்பாக் என்ற 10 வயது குழந்தை உயிரிழந்தது. ஜகாரியாவின் உடலை மீட்க முயன்ற மற்றொருவர் காயமடைந்துள்ளார் என்று பலஸ்தீன ஊடகங்கள்  தெரிவித்தன.

காசாவின் ரஃபாவில் தொடங்கிய போர்நிறுத்தத்திற்குப் பின்னர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 137 உடல்களின் பட்டியல் நாளுக்குநாள் நீளுகிறது. மேலும், கான்கிரீட்டின் அடியில் 10,000 உடல்கள் புதைந்திருக்கலாம் என பலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைப்பு கருதுகிறது.

போர்நிறுத்தத்தை மீறி நடந்த இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில், மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, எட்டு பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 7, 2023 முதல் இன்று வரை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 47,035 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்க, 111,091 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...

கண்களைக் கட்டிக்கொண்டு நடந்த கொழும்பு மேயர்.

பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம்...