பௌசுல் ஹக் ஹஜ் கமிட்டி உறுப்பினராக இருப்பதற்கு இடைக்காலத் தடை..!

Date:

புதிய ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் பௌசுல் ஹக், கமிட்டியில் தொடர்ந்தும் உறுப்பினராக இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதி பி. குமார் ரத்னம் அவர்களினால் இன்று (22) இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 16 வருடங்களாக கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ட்ரஸ்டியாக கடமையாற்றிய போது கணக்கறிக்கையை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கு முறையாக சமர்ப்பிக்காததை வைத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி ஜும்ஆ மஸ்ஜிதின் ட்ரஸ்டியாக பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் நம்பிக்கை நிதியத்துக்கு (MCF) பங்களிப்பு செய்யாமையினால் வக்பு சபையினால் கடந்த வருடம் அவர் ட்ரஸ்டி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் புத்தசாசன மத விவகார அமைச்சினால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ஹஜ் குழுவில் அல்ஹாஜ் பௌசுல் ஹக் அவர்களும் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி: https://tamil.newsnow.lk/2024/12/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/

 

 

 

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...