முழு உலகிலும் அமைதியும் செழிப்பும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்: சவூதி அரேபிய தூதுவரின் புத்தாண்டு வாழ்த்து

Date:

முழு உலகமும் அமைதியும் செழிப்பும் அடைய இறைவன் அருள் புரியட்டும் என்று இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் எனது சார்பிலும் இலங்கை குடியரசில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் எனது சக ஊழியர்களின் சார்பிலும் இலங்கை நட்பு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாண்டு இலங்கைக் குடியரசிற்கும் அதன் மேன்மைமிகு மக்களுக்கும் நன்மை, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும்.

எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவு அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் எனவும் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...