HMPV வைரஸ் குறித்து அரசாங்கம் விழிப்புடன் உள்ளது: சுகாதார அமைச்சர்

Date:

சீன வைரஸ் குறித்து அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அத்துடன் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் குறித்து தகவல் கிடைத்தால், அது குறித்து நிச்சயமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் வைத்தியர் நிஷாந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருவதாகக் கூறினார்.

இதேவேளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கையிலும் HMPV வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இந்த ஆண்டு HMPV வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இன்னும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

அஸ்ஸைய்யித் ஸாலிம் ரிபாய் மெளலானாவின் தாயாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

இன்று முற்பகல் காலமான பஹன மீடியாவின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய்...

அடுத்த மாதம் முதல் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும்!

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண...

நாட்டில் “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் பணிகள் நாளை ஆரம்பம்

சுகாதார சேவையின் உச்ச பலனை  இலகுவாக பெற்றுக்கொள்வதை  உறுதி செய்வதற்காக, சுகாதார...

பஹன மீடியா தலைவரின் தாயார் மறைவு!

பஹன மீடியா நிறுவனத்தின் தலைவரும் மீட்ஸ் செயல்திட்டத்தின் ஸ்தாபகருமான சமூக செயற்பாட்டாளர்...